கட்டுரை, புதையல், வாழ்வியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

வேலைக்குத் தயாராவது எப்படி?

தாமஸ் எல்.ஃப்ரீட்மேன்
21 Sep 2021, 5:00 am
0

டித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்று பதைப்போர் பல்லாயிரவர் என்றால் வேலைக்கு நல்ல ஆள் கிடைக்கவில்லையே என்று தவிப்போரும் சில ஆயிரம் பேர் தேறுகின்றனர். இது எல்லா நாடுகளிலும் எப்போதும் இருக்கும் பிரச்சினைதான் என்றாலும் சமீபகாலத்தில் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அதிகமாகப் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்பம் எல்லா வேலைகளிலும் முக்கிய இடம் பிடித்துவிட்டதால் இது எல்லோராலும் உணரப்படத் தொடங்கிவிட்டது.432

என்ன படித்தால் என்ன, படிப்புக்கேற்ற வேலையா கிடைக்கிறது என்று பரவலாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

எல்லோரும் வேலை கேட்டுத்தான் வருகிறார்கள், நாம் எதிர்பார்க்கிற மாதிரி வேலை செய்ய ஓரிருவர்கூட தேறவில்லையே என்று வேலை தருகிறவர்கள் சலித்துக்கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னால் தொழில் துறை மந்தநிலை உச்சத்தில் இருந்தபோது நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9% என்று அளவிடப்பட்டது. இந்த 9% பேரும் தொழில் துறை மந்தநிலையால் மட்டும் வேலை பெற முடியாமல் தவிக்கவில்லை. அப்போதும் கிடைத்துக்கொண்டிருந்த வேலைகளைச் செய்யும் திறன் அவர்களிடம் இல்லை. இது வேலைதேடும் அனைவரின் உள்மனதுக்கும் தெரியும்.

இதை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை செயலர் டோனி வேiக்னர் அழகாகக் கூறுவார், “உனக்கு என்ன தெரியும் என்று உலகம் கவலைப்படுவதில்லை, உனக்குத் தெரிந்தவைகளிலிருந்து நீ எப்படி அதற்குப் பயன்படப் போகிறாய் என்றுதான் பார்க்கிறது” என்று.

இப்போது புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் புதுப்புது வேலைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. வரலாறு, இலக்கியம், தத்துவம் போன்ற கலைப்பாட பட்டங்களை வைத்துக்கொண்டு அந்த வேலைகளைச் செய்யமுடியாது.

எனவே, வேலைகளைத் தரக்காத்திருக்கும் நிறுவன உரிமையாளர்கள் அல்லது மேலாளர்கள், தங்களுடைய தேவைக்கேற்ப ஆள்களைத் தேர்வுசெய்ய, வழிமுறைகளைப் புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் திறமைகள் உங்களுக்கு எப்படி வந்தது என்று அவர்கள் கவலைப்படுவதில்லை. வீட்டில் படித்தீர்களா, ஆன்-லைனில் படித்தீர்களா, திறந்தநிலை பல்கலைக்கழகத்திலா அல்லது யேல் பல்கலைக்கழகத்திலா என்றெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களுடைய வேலைகளைச் செய்து அவர்களுக்கு உங்களால் வருமானம் பெருகுமா என்பதை மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள்.

இன்றைக்கு வேலைவாய்ப்புகள் எப்படி கிடைக்கின்றன என்று அறிய ஹயர்ஆர்ட் (www.hireart.com) எலியோனோரா ஷரேப் (27), நிக் செட்லட் (28) ஆகியோருடன் பேசினேன். எலியோனோரா, மெக்கின்ஸி நிறுவனத்திலும் நிக் செட்லெட் கோல்ட்மேன் சேஷ் நிறுவனத்திலும் அனுபவம் பெற்றவர்கள்.

“வேலைக்கு ஆள் தேடுவோருக்கும் வேலை தேடுவோருக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க இவர்கள் தனி நிறுவனத்தைத் தொடங்கினர். இரு தரப்பாரும் தொடர்பில்லாமல் துண்டுதுண்டாக பிரிந்து நிற்பதால் இணைப்புப் பாலமாக நாங்கள் இருக்கவேண்டியதாக இருக்கிறது”.

“வேலை தேடும் பலருக்கு, வேலைதரும் நிர்வாகிகள் விரும்புவது என்னவென்று தெரியாமல் மட்டுமல்ல, அந்தத் திறமைகளை எப்படி அடைவது என்பதும் தெரியாமல் இருக்கிறார்கள். வேலை தருவோரும் சரி, இப்போதைய படிப்பு எப்படிப்பட்டது, அதை முடித்து வருவோரிடம் என்னென்ன திறமைகள் இருக்கும் என்பது தெரியாமலேயே எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த முதலாளியும் தன்னிடம் புதிதாக வேலைக்குச் சேருபவருக்கு பயிற்சி அளிக்கத் தயாராக இல்லை. வரும்போதே எல்லாம் தெரிந்த வித்தகராக இருக்க வேண்டும் என்று அவசரப்படுகிறார்கள்”.

“இப்போதைய பொருளாதாரச் சூழலில் வேலைக்குச் சேரும்போதே, அந்த வேலைக்குத் தகுதியானவர்தான் என்று நிரூபிக்க வேண்டிய நிலைமையே நிலவுகிறது. அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யவே நாங்கள் எங்கள் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறோம்.”

“சிஸ்கோ, சேப்வே, ஏர்பிஎன்பி போன்ற பெரிய நிறுவனங்களும் சிறிய அளவில் குடும்பங்களே நடத்தும் நிறுவனங்களும் தங்களிடமிருக்கும் வேலைவாய்ப்பு என்ன என்பதை எங்களுக்குத் தெரிவிக்கிறார்கள். நாங்கள் உடனே அந்த வேலைக்குத் தேவைப்படும் தகுதிகள் என்ன என்று வரைமுறை செய்து அதற்கேற்ப எழுத்துத் தேர்வுகளுக்கும் விடியோ தேர்வுகளுக்கும் களம் அமைக்கிறோம். பிறகு வேலை தேடும் இளைஞர்களுக்கு அந்தத் தேர்வுகளை நடத்தி அவர்களுடைய குறை நிறைகளைச் சுட்டிக்காட்டுகிறோம். வேலைக்குத் தேவைப்படும் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் உத்திகளையும் இதர பயிற்சிகளையும் அளிக்கிறோம். நல்ல முறையில் செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறுகிறவர்களை அந்தந்த நிறுவனங்களின் நேர்காணலுக்கு அனுப்புகிறோம்.”

“எங்கள் நிறுவனத்தில் மொத்தம் 50 ஆயிரம் பேர் பதிவுசெய்துகொண்டனர். ஒரு வேலைக்கு 500 பேர் என்று பத்துவித வேலைக்கு அவர்களைத் தயார் செய்தோம். வேலை தேடுவோர் நிறுவனங்களுக்குத் தங்களைப்பற்றிய சுய விவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களையும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்களில் இவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இந்த சுய விவரக் குறிப்புகள் அனைத்துமே குப்பைகள் என்றே பல நிறுவனங்களில் உள்ள மனித ஆற்றல் துறை ஊழியர்கள் கருதுகின்றனர். 500 நிறுவனங்களுக்கு மனுச் செய்தால் ஏதாவது ஒரு நிறுவனம்தான் அதற்குப் பதில் தருகிறது என்றார் அனுபவம் மிக்க விண்ணப்பதாரர். இது உண்மையாகவும் இருக்கலாம். பல நிறுவனங்களின் வேலைக்குத் தாங்கள் பொருத்தமானவராக இருக்கமாட்டோம் என்று விண்ணப்பதாரரே முடிவுசெய்து அசுவாரசியமாக விண்ணப்பங்களை அனுப்புவதும் நடக்கிறது.

வேலைக்குத் தேடுவோரை எப்படித்தான் தேர்ந்தெடுப்பது? ஹயர்ஆர்ட் நிறுவனம் அதற்கொரு வழிமுறை வைத்திருக்கிறது. ஒரு நிறுவனத்தில் வேலைக்கு மனுச் செய்வதாக இருந்தால், அந்த நிறுவனத்தில் அந்த வேலையிலேயே சேர்ந்துவிட்டதாக நடிக்கச் சொல்கிறது. இணையதளத்தில் வரும் தகவல்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய வேலை என்று வைத்துக் கொள்வோம். ஹயர்ஆர்ட் நிறுவனம், விண்ணப்பதாரரை அழைத்து, சரி உங்களை அந்த நிறுவனத்தின் விற்பனை மேலாளராகவே நியமித்துவிட்டோம் என்று கற்பனை செய்துகொள்வோம், இப்போது நாங்கள் தரும் புள்ளிவிவரங்களை எப்படி பரிசீலிப்பீர்கள், இவை மேம்பட என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேட்பார்கள். இப்படித்தான் அந்த வேலைக்கு அவர்களைத் தயார் செய்வார்கள்.

சமூக ஊடக மேலாளராக விரும்பினால், டுவிட்டர், பேஸ்புக், பின்டெரஸ்ட், கூகுள், எச்டிஎம்எல், ஆன் பேஜ் எஸ்இஓ கீ வேர்ட் அனாலிசஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் இருக்க வேண்டும்.

கேன்யி வெஸ்ட் நிறுவனம் இந்த பேஷன் ஆடைகளை புதிதாக வடிவமைத்திருக்கிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் வாங்க ட்வீட் மூலம் பிரசாரம் செய்ய வேண்டும், என்ன வாசகத்தைச் சொல்லி வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள் என்று ஹயர்ஆர்ட் நிறுவனம் கேட்கும். விண்ணப்பதாரர் அதற்கு சரியான பதிலைச் சொல்வார், அப்படி முடியாவிட்டால் நிறுவனம் அவருக்கு உணர்த்தி அவரைத் தயார் செய்யும்.

இதைத் தெரிவித்த ஷரேப் ஓர் உதாரணத்தையும் சுட்டிக்காட்டினார். பார்டர்ஸ் என்ற நிறுவனத்தில் ஒரு பெண் காசாளராகப் பணிபுரிந்தார். தனக்கு எதிர்காலம் இல்லை என்று சிறிது காலத்துக்குப் பிறகு உணர்ந்தார். அவர் தானாகவே எக்செல் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு தேர்ந்தார். அவர் எங்களிடம் சேர்ந்தபோது எக்செலில் அவருக்குக் கடுமையான பயிற்சிகளை அளித்தோம். ஸ்டான்போர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களைவிட அவர் சிறந்து விளங்கினார். பிறகு அதற்கான வேலைவாய்ப்பு தேர்வில் அவர்தான் முதலிடம் பெற்று உயர் பதவியில் சேர்ந்துவிட்டார். கல்வித்தகுதி என்று பார்த்தால் அவரிடம் ஏதுமி்ல்லை. கடுமையான முயற்சியும் பயிற்சியும்தான் அவரைத் தகுதியுள்ளவராக்கியது.

“வேலைக்குத் தகுதியில்லாதவர் என்று ஒருவர் நிராகரிக்கப்பட 2 காரணங்கள்தான் உள்ளன. உங்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டால் எப்படி உதவிகரமாக இருப்பீர்கள் என்று வேலைதருவோருக்குத் தெளிவாக உணர்த்தத் தவறுகிறீர்கள். அடுத்தது, நீங்கள் பார்க்கப்போகும் வேலைக்கு உங்களுக்கு என்ன திறமைகள் தேவை என்று உங்களுக்கே தெரிவதில்லை. இந்தக் காரணங்களால்தான் வேலை கிடைப்பதில்லை” ஹயர் ஆர்ட் நிறுவனத்தை நடத்தும் இருவரும் கூறுகின்றனர்.

புதிதாக சிந்திப்பவர்கள், தீர்வுகளைக் காண்பவர்கள்தான் உடனுக்குடன் வேலைகளைப் பெறுகிறார்கள். நீங்கள் படித்த படிப்போ, உங்கள் திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொண்ட முறைகளோ வேலை தருகிறவர்களுக்கு முக்கியமே இல்லை. அவர்களுடைய தொழில் அல்லது வியாபாரத்தை முன்னுக்குக் கொண்டுவர அவர்கள் லாபம் சம்பாதிக்க நீங்கள் எப்படி உதவியாக இருப்பீர்கள் என்பதுதான் அவர்களுடைய அக்கறை என்பதே நாம் பெற வேண்டிய பாடம்.

-நியூயார்க் டைம்ஸ்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தாமஸ் எல்.ஃப்ரீட்மேன்

தாமஸ் எல்.ஃப்ரீட்மேன், அமெரிக்காவின் முக்கியமான பொது அறிவுஜீவிகளில் ஒருவர். 'தி நியுயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் வெளியுறவுத் துறைக் கட்டுரையாளர்.

தமிழில்: வ.ரங்காசாரி







முகம்மது தாகி கட்டுரைவழக்குப் பதிவுமுதுமைமூவேந்தர்கள்விசிகஅரசியல் அறிவியல்சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்சரத் பவார்நோர்டிக் நாடுகள்இந்தியாவுக்கான திராவிடத் தருணம்குதிநாண் தட்டைச்சதைமாநில மொழிவழிக் கல்விசோழப் பேரரசுபோடா போடாகாட்சி மொழிபெவிலியன் முனைமுன் தயார்நிலைபோராட்டம்நுகர்வுஅம்பேத்கரின் இறுதி நாள்இறந்தவர்களைத் தூற்றுவது இழிவுநீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?பழங்குடிஏர்முனைசெளந்தரம் ராமசாமிவேலைக்குத் தயாராவது எப்படி?டி20 போட்டிகள்குழந்தையின்மைஒடிஷாவர்ணமற்றவர்களும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!